இந்தியாவிலிருந்து மீளத்திரும்பியவர்களின் சுமூகமான மீள் ஒருங்கிணைப்பிற்கான உதவித் தொகை வழங்குதல்..!
இந்தியாவிலிருந்து மீளத் திரும்பியவர்களின் சுமூகமான மீள் ஒருங்கிணைப்பிற்கான உதவித் தொகையானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் இன்றைய தினம் (28.07.2025) பி.ப 3.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா. ஜெயகரன், அரசசார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் திரு. ந. தயாபரன், அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி வைலட் நிக்லஸ் மற்றும் OfERR (Ceylon) மாவட்ட முகாமையாளர் திருமதி.எம். தர்சினி மற்றும் உதவித் திட்ட இணைப்பாளர் திரு.இ. பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது இந்தியாவிலிருந்து மீளத் திரும்பியவர்களுடன் அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் கல்வி தொடர்பாகவும் அரசாங்க அதிபர் கலந்துரையாடினார்.
UNHCR நிறுவனத்தால் OfERR (Ceylon) நிறுவனம் தெரிவு செய்யப்பட்டு – அந் நிறுவனத்தால் இதற்கான உதவித்தொகை தலா ஒருவருக்கு ரூபா 90,000
வீதம் கோப்பாய் மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் மீளத் திரும்பிய 03 குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பது பேருக்குமாக ரூபா 810,000.00 கொடுப்பனவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


