ஜப்பானில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புகள்!

ஜப்பானில் சிறந்த தொழில் தகைமைகளை கொண்டவர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்படும் என ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யொஷிமாசா ஹயாஷி (Yoshimasa Hayashi) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் (Ranil Wickremesinghe) மற்றும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் 2023 ஆண்டில் சிறந்த தொழில் தகைமைகளை கொண்டவர்களுக்கு ஜப்பானில் பல்வேறு துறைகளிலும் தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொடுக்க ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அந்நிய செலாவனி பற்றாக்குறையினால் இலங்கை அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யொஷிமாசா ஹயாசி குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor