இவ் வருட இறுதிக்குள் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள்

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கடனின் முதல் தவணை இந்த வருட இறுதிக்குள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

இதனால் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும் இது கடன் கொடுனருடன் ஆதரவு மற்றும் உத்தரவாதத்தைப் பொறுத்தது என்று கூறியுள்ளார்.

நாட்டின் கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவளிக்கும் வகையில் நேற்றைய தினம் கடன் கொடுனருடன் விஷேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றதுடன், மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோர் நாட்டின் தற்போதைய கடன் நிலைமை மற்றும் மறுசீரமைப்புத் திட்டங்கள் குறித்து கடன் கொடுனருடன் விவாதிக்கப்பட்டது.

Recommended For You

About the Author: webeditor