சஜித்தால் ஏமாற்றம் அடைந்த அஜித் வெளியேறினார்

கம்பஹா மாவட்ட வேட்புமனுப் பட்டியலில் தனது பெயர் உள்ளடங்கியுள்ள போதிலும் இவ்வருட பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார்.

கம்பஹா மாவட்ட அமைப்பாளர் பதவியில் இருந்து தாம் நீக்கப்பட்டமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்தார்.

“.. இத்தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் பட்டியலில் நான் ஒரு வேட்பாளராக உள்ளேன். மேலும் கம்பஹா தொகுதி அமைப்பாளராக 20 வருடங்களாக பணியாற்றி வருகிறேன். இந்த நேரத்தில், நான் வாக்கு கேட்பதைத் தவிர்க்க எண்ணியுள்ளேன்.

நான் குறிப்பாக ஐக்கிய மக்கள் கட்சியுடன் இணைந்து பணியாற்ற விரும்பவில்லை, எனவே அந்த வாக்கை எனக்காக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஏனெனில் எமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தொடர்பில் நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். நான் வேட்புமனுவில் கையொப்பமிட்டு 24 மணித்தியாலங்களின் பின்னர் கம்பஹா தொகுதியில் எனது தொகுதி அமைப்பாளர் பதவி ஐக்கிய தேசியக் கட்சியில் ரணில் விக்கிரமசிங்கவிடம் பணியாற்றிய ஒருவருக்கு இரகசியமாக வழங்கப்பட்டது…”

Recommended For You

About the Author: admin