மாத்தறை- கொழும்பு ரயிலால் மோதப்பட்டு குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு!

மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலால் மோதப்பட்டதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று (12) மாலை கட்டுகுருந்த ரயில் நிலையத்துக்கு அருகில் இந்தச. சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மூன்று வயது குழந்தை காயமடைந்து களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குழந்தை உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த மூவரும் களுத்துறை தெற்கு ரஜவத்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin