கடற்றொழிலுக்கு சென்றவர் சடலமாக மீட்பு!

யாழில் கடற்றொழிலுக்கு சென்றவர் படகினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று 5.30 மணியளவில் அராலியில் இருந்து தனியாக கடற்றொழிலுக்கு சென்ற நபர் வீடு திரும்பாத காரணத்தால் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது அவரது சடலம் இன்று காலை பொன்னாலை கடலில் படகுடன் கரையொதுங்கியுள்ளது.

இந்நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸார். சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர். அத்துடன் தடயவியல் பொலிஸாரும் தடயங்களை சேகரித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் அராலி மத்தி, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த பேரானந்த சிதம்பரம் நாகராஜா (வயது 53) என்பவராவார்.

சடலத்தின் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Recommended For You

About the Author: admin