இரண்டாவது வெண்கல பதக்கம்: பிரதமர் மோடி வாழ்த்து

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் நான்காம் நாளான இன்று இந்தியாவுக்கு மற்றொரு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

ஏர் பிஸ்டல் ஆண்கள் (air pistol) பிரிவு போட்டியில் பங்குபற்றிய பாகர் சரபோஜித் சிங் (Bhaker-Sarabjot Singh) என்பவரே இவ்வாறு வெண்கலப் பதக்கத்தை பெற்றுள்ளார்.

நேற்று நடைபெற்ற மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பெண்கள் பிரிவில் வெண்கலம் வென்று இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை, மனு பாகர் தொடங்கி வைத்தார்.

இதனால் ஒலிம்பிக் போட்டியாளர்களின் பதக்க பட்டியலில் இந்தியா 22ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி “பெருமைமிகு தருணம்“ என தனது எக்ஸ் தளத்தில் அவர்கள் இருவரையும் வாழ்த்தியுள்ளார்.

இது அவர்களின் நிலையான சிறப்பையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது. எனவும் அவர் இதில் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin