LPL கிண்ணத்தை வென்றது ஜஃப்னா கிங்ஸ்!

2024 ஆம் ஆண்டுக்கான லங்கா ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஜஃப்னா கிங்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற குறித்த போட்டியில் காலி மார்வெல்ஸ் மற்றும் ஜஃப்னா கிங்ஸ் அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜஃப்னா கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய காலி மார்வெல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் காலி மார்வெல்ஸ் அணியின் சார்பில் பானுக ராஜபக்ஷ 82 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இதற்கமைய 185 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய ஜஃப்னா கிங்ஸ் அணி 15.4 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஜஃப்னா கிங்ஸ் அணி கிண்ணத்தை தன்வசப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: admin