கொழும்பில் 49 பேர் கைது

கொழும்பு ஜம்பட்டா வீதியை உள்ளடக்கிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 34 சந்தேகநபர்கள் உட்பட 49 பேர் கைது செய்யப்பட்டதாக கரையோர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹெரோயின், ஐஸ், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களுடன் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றத்தடுப்பு விசேட நடடிக்கையின் கீழ் கொச்சிக்கடை தேவாலயத்திற்கு அருகாமையிலும் ஜம்பட்டா போதிக்கு அருகாமையிலும் வீதியை மூடி இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 2 மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Recommended For You

About the Author: admin