திருகோணமலையில் தூக்கிட்டு ஒருவர் மரணம்

திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மனையாவேளி பிரதேசத்தில் தூக்கிட்டு ஒருவர் மரணம் அடைந்துள்ளதாக துறைமுகப் பொலிசார் தெரிவித்தனர்.

இன்று (02) பிற்பகல் 4.15 மணியளவில் குறித்த நபரின் சடலம் கண்டறியப்பட்டுள்ளதாக குடும்பத்தார் தெரிவித்தனர்.

இவ்வாறு தூக்கிட்டு மரணமானவர் தமிழ் வேந்தன் (வயது 52) எனவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் தூக்கிட்டமைக்கான காரணம் இதுவரை தெரிய வராத நிலையில் மேலதிக விசாரணைகளை துறைமுக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக துறைமுக பொலிசார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: admin