சிங்கப்பூரில் கறுப்பு நிறமாக மாறிய Sentosa கடற்கரை

உலகில் அதிக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைந்துள்ள சிங்கப்பூரின் சென்டோசா தீவின் கடற்கரை கருப்பு நிறமாக மாறியுள்ளது.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள துறைமுகத்தில் உள்ள எண்ணெய் முனையத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு காரணமாக, கடற்கரை கருப்பு நிறமாக மாறியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இரண்டு கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த எண்ணெய் கசிவு ஏற்பட்டது.

இந்நிலையில், தற்போது கடற்கரையை சுத்தப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது.

ஆகையினால் குறித்தப் பகுதியை தற்காலிகமாக மூடுவதற்கு உள்ளாட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்

Recommended For You

About the Author: admin