சிக்கல் ஏற்பட்டால் சுயேட்சையாக போட்டி எம்.கே.சிவாஜிலிங்கம்

தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டால் தான் சுயேட்சையாக போட்டியிடுவேன் என வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு அவர் தெரிவித்தார். இச்சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்த போது, “தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இம்முறை மக்கள் மத்தியிலும் பொது வேட்பாளர் விடயம் பேசப்படுகிறது.

எனவே இம்முறை ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவார். அதில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் நான் சுயேட்சையாக போட்டியிடுவேன்” என தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin