ரணில் – சி.வி யாழ்ப்பாணத்தில் சந்தித்துப் பேச்சு

வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்துப் பேசியுள்ளார்.

நல்லூரில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் நேற்று இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி தம்மை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும், இது எந்தவொரு அரசியல் நோக்கத்திற்காகவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது, இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், ஜனாதிபதி தேர்தல் குறித்தும் ஜனாதிபதி ரணில் விளக்கமளித்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, வடமாகாணத்தில் இடம்பெற்று வரும் அபிவிருத்திகள் மற்றும் வடமாகாண மக்களின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin