யாழில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்

உத்தியோகத்தர் உட்பட மூவர் கயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகஸ்தர் உட்பட்ட மூவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணம், தொல்புரம் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்திற்கு, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட இளைஞர்களுக்கு இடையிலான மோதலே காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

இதன் போதே பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவர் காயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், தனிப்பட்ட முரண்பாடே வாள் வெட்டு சம்பவத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin