“லண்டனில் கைப்பைக்காக கொல்லப்பட்ட பெண்”: 22 வயதான இளைஞன் கைது

வடக்கு லண்டனில் கைப்பைக்காக 60 வயதான பெண் ஒருவர் நேற்றைய தினம் கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த பெண் பைப்பையை தர மறுத்தமையினால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 11.50 மணியளவில் எட்க்வேரில் உள்ள லைம்ஸ்டேல் கார்டன் சந்திப்பிற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் ஒரு குழுவினர் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கொலின்டேல் பகுதியில் 22 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்தப் பெண் தனது கைப்பையை எடுக்க முயன்றபோது ஆண் ஒருவரால் மூன்று முறை கத்தியால் குத்தப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முதலுதவி வழங்கப்பட்டது.

முதல் துணை வைத்தியர் இரண்டு நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு வந்த போதிலும், குறித்த பெண் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

பெண்ணின் தொண்டையிலும், மார்பு பகுதியிலும் குத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin