Play-off சுற்றிலிருந்து பஞ்சாப் அணி வெளியேற்றம்: சிராஜ்ஜின் அதிரடி பந்து வீச்சு

இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் 58ஆவது போட்டி நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ரோயல் சேலஞ்சர்ஸ் அணி 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையிலான போட்டியில் முதலில் பந்து வீச்சை தெரிவு செய்த பஞ்சாப் அணிக்கு 241 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பஞ்சாப் அணி சார்பில் ஆரம்ப வீரர்களாக பிரப்சிமரன் சிங் மற்றும் ஜோனி பேர்ஸ்டோவ் களமிறங்கியிருந்தனர்.

ரிலீ ரோசோவ் மற்றும் ஷஷாங்க் சிங் இணைந்து சிறப்பாக விளையாடி அணி சார்பில் ஓட்டங்களை குவித்தனர்.

ரிலீ ரோசோவ் அரை சதத்தை பதிவு செய்த நிலையில் 61 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில், பஞ்சாப் அணி 17 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 181 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டனர்.

ரோயல் சேலஞ்சர்ஸ் அணி சார்பில் சிராஜ் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

தீர்மானமிக்க இந்த போட்டியின் முடிவில் Play-off சுற்றிலிருந்து வெளியான இரண்டாவது அணியாக பஞ்சாப் அணி காணப்படுகின்றது.

Recommended For You

About the Author: admin