கனடாவில் முதியவர்களை இலக்கு வைத்து மோசடி: தமிழர்கள் இருவர் கைது

கனடாவில் முதியவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட மோசடி குற்றச்சாட்டில் தமிழர்கள் இருவரை Durham பொலிஸார் கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவர்கள் முதியவர்களை இலக்கு வைத்து வங்கி மற்றும் கடன் அட்டை மோசடியில் ஈடுபட்டதாக பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 27 வயதான லக்சாந்த் செல்வராஜா மற்றும் 25 வயதான அக்சயா தர்மகுலேந்திரன் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் Ajax நகரை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்தேகநபர்களுக்கு எதிராக 40 குற்றச்சாட்டுகள் முன்வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேநபர்களினால் பாதிக்கப்பட்டவர்களில் 90 வயதுடைய தம்பதியரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

இதேவேளை, சந்தேகநபர்களினால் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என தெரிவித்துள்ள புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களின் படங்களை வெளியிட்டு பொதுமக்களை எச்சரித்துள்ளனர்

Recommended For You

About the Author: admin