பிரான்ஸ் சுமார் 47 ஆயிரம் புலம்பெயர்ந்தோர் தடுத்துவைப்பு

கடந்த வருடம் (2023 ஆம்) நாடு முழுவதும் உள்ள தடுப்பு முகாம்களில் 46,955 புலம்பெயர்ந்தோரை பிரான்ஸ் அதிகாரிகள் தடுத்துவைத்திருந்ததாக தெரியவந்துள்ளது.

SOS Solidarity மற்றும் France Terre d’Asile உள்ளிட்ட புலம்பெயர்ந்தோருக்கான உரிமை குழுக்களின் அறிக்கை மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்கள் எனவும் ஐந்து வீதம் மாத்திரமே பெண்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் 120 இற்கும் மேற்பட்டவர்கள் தாம் 18 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவித்தும், பிரான்ஸ் அதிகாரிகள் அவர்களை இளைஞர், யுவதியாகவே கருதியதாக தெரிவிக்கப்படுகிறது.

பெரும்பாலும் அல்ஜீரியா, துனிசியா மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதிகரிக்கும் வன்முறை
புலம்பெயர்ந்தோர் தடுத்துவைக்கப்படுவது அவர்களின் மன ஆரோக்கியத்தை பாதிப்பதாகவும், சில சந்தர்ப்பங்களில் தற்கொலை முயற்சிகள், பதற்றம் மற்றும் வன்முறை சம்பவங்களுக்கு வழிவகுப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்தோர் நால்வர் உயிரிழந்ததாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன.

மேலும், பிரான்ஸின் பிராந்தியமொன்றில் அமைந்துள்ள முகாமில் 40 இற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் உடல் ரீதியான வன்முறை, அச்சுறுத்தல், இனவெறி மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

இதன் காரணமாக நாடுகடத்தப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புலம்பெயர்ந்தோருக்கான உரிமை குழுக்கள் சுட்டிக்காட்டுகின்றன.

Recommended For You

About the Author: admin