முகமாலையில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள்

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் மனித எச்சங்களும் சீருடை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டுப் போரின் போது புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த குழுவினரால் கடந்த 25ஆம் திகதி இந்த மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதேவேளை, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட அறிவித்தலின் பிரகாரம் மாவட்ட நீதிவான் உரிய இடத்திற்கு வந்து பரிசோதனையை மேற்கொண்டார்.

அதனையடுத்து எதிர்வரும் 29ஆம் திகதி திங்கட்கிழமை மேலும் அகழ்வு பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin