பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்: இருவர் உயிரிழப்பு

களுத்துறை- மொரகஹஹேன பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான இருவர் உயிரிழந்துள்ளனர்.

மிரிஸ்வத்த பிரதேசத்தில் டயர் தொழிற்சாலையொன்றிற்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை (23)அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொலிஸாரின் கட்டளையை மீறி முச்சக்கரவண்டியொன்று பயணித்ததுடன் பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்துள்ளனர்.

இதனையடுத்து அருகிலிருந்த பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் முச்சக்கரவண்டியை நிறுத்த முற்பட்டபோதிலும் மீண்டும் பொலிஸாரின் கட்டளையை அவர்கள் மீறியுள்ளனர்.

இதன்பின்னர் பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, 22எம்எம் பிஸ்டல் ரக துப்பாக்கி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin