சுமந்திரனை அவமதிக்கும் வகையில் வெளியிடப்பட்ட கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது: டக்ளஸ்

அழையா விருந்தாளியாக ஜே.வி.பியின் மாநாட்டுக்கு சுமந்திரன் வந்திருந்தார் எனக் கூறி சுமந்திரனை அவமதித்தமையை ஏற்றுக்கொள்ள முடியாது என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரித்துள்ளார்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஜே.வி.பி கட்சி மாநாடொன்றை நடத்தியிருந்தது. இந்த மாநாட்டுக்கு தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுக்காமல் சென்றதாக அக்கட்சியின் பேச்சாளர் எனக் கூறுபவர் ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தமையை சுட்டிக்காட்டியே அவர் மேற்கண்டவாறு அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“ஒரு கட்சியின் மாநாடொன்றிற்கு, ஏனைய கட்சிகளுக்கும் அழைப்பு விடுப்பது இயல்பான ஒன்றுதான். அந்த வகையில் தான் சுமந்திரனும் சென்றிருப்பார் என நினைக்கின்றேன்.

ஆனால் தமது நிகழ்வில் கலந்துகொண்ட ஒருவரை அவமானப்படுத்தும் வகையில் குறித்த நபர் ஏன் அவ்வாறு கூறினார் என்று தெரியவில்லை.

அதேநேரம் கட்சிக்கான அழைப்பு விடுக்கப்பட்டால் அந்த அழைபை ஏற்று அழைக்கப்பட்ட கட்சியின் சார்பில் எவரும் செல்லமுடியும். அப்படி இருக்கும் பேது, சுமந்திரனை அவமானப்படுத்தும் வகையிலேயே குறித்த பேச்சாளர் கருத்துத் தெரிவித்துள்ளார்” என்றே தான் கருதுவதாக குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin