அரச, தனியார் பஸ் ஊழியர்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம்

பதுளையில் தனியார் பஸ் ஊழியர்களுக்கும் அதே பாதையில் இயங்கும் அரச பஸ் ஊழியர்களுக்கும் இடையில் நேற்று மாலை பதுளை மத்திய பஸ் நிலையத்தில் மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இதன்போது, காயமடைந்த அரச ஊழியர்கள் இருவர் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், தனியார் பஸ் சாரதி மற்றும் உதவியாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ் இயங்கும் நேரம் குறித்த வாக்குவாதத்தின் போது, தனியார் பஸ் சாரதி, அரச பஸ் சாரதி மற்றும் நடத்துனரை கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தையடுத்து, அரச பஸ் ஊழியர்கள் குழுவொன்று தனியார் பஸ் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தமை‌ குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin