வயதான நபருக்கு பேரன் கொடுத்த அதிர்ச்சி

புத்தளம், மாதம்பே பிரதேசத்தில் வயதானவரின் வங்கி அட்டையை திருடி 80 ஆயிரம் ரூபாய் பணம் பெற்ற பேரனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திருடிய பணத்தில் தனது மோட்டார் சைக்கிளை திருத்தியதாக கூறப்படும் 22 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பேரன் நான்கு முறை வங்கி அட்டையில் இருந்து இதுபோன்ற பணத்தை எடுத்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த தாத்தா பல வருடங்களாக கூலி வேலை செய்து சில வருடங்களுக்கு முன் ஓய்வு பெற்றவர், அங்கு ஊழியர் நலன்புரி பணமாக 2 லட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டார்.

அவற்றை வங்கியில் வைப்பு செய்துவிட்டு மனைவியுடன் வசித்து வந்துள்ளார். கடந்த வாரம் ஒருநாள் அவரது மனைவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

அவரது சிகிச்சைக்குத் தேவையான பணத்தைப் பெறுவதற்காக வங்கி அட்டையைப் பயன்படுத்தி பணத்தை எடுக்கச் சென்றபோது அவருக்குத் தெரியாமல் வங்கிக் கணக்கில் இருந்து 82000 ரூபாய் குறைந்துள்ளமை உறுதி செய்துள்ளார்.

அதற்கமைய, பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற அவர் முதற்கட்ட விசாரணையில் சந்தேகத்தின் பேரில் பேரனை கைது செய்து அவரிடம் நடத்திய விசாரணையில் அனைத்தும் தெரியவந்துள்ளது.

அதற்கமைய, சந்தேகநபரை பெல்மடுல்ல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin