இலஞ்சம் வாங்கிய அதிகாரிகள் இருவர் கைது

இலஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் நுவரெலியா மாவட்ட முகாமையாளர் ஒருவரும் முகாமைத்துவ உதவியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அந்த அதிகாரிகள் இன்று (20) கைது செய்யப்பட்டுள்ளனர்.

பஸ் உரிமையாளர் ஒருவரின் வீதி அனுமதிப்பத்திரத்தை மாற்றுவதற்காக 30,000 ரூபா இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: admin