இந்திய விவசாயிகளின் போராட்டம் இடைநிறுத்தம்

இந்திய தலைநகர் புதுடெல்லியில் விவசாயிகளினால் முன்னெடுத்துவரும் போராட்டம் தற்காலிகமாக இன்று வெள்ளிக்கிழமை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்களுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுவரும் நிலையில் போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்திய விவசாயிகள் தமது உற்பத்திகளுக்கு அதிக விலை கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அரசாங்க அதிகாரிகள் விவசாயிகளின் பிரச்சனை தொடர்பில் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளனர்.

விவசாயிகளின் தொழிற்சங்ககத்திற்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் ஞாயிறு அன்று நடைபெறவுள்ளது.

இதன் பின்னர் போராட்டம் தொடர்ந்து முன்னெடுப்பதா அல்லது கைவிடுவதாக என தீர்மானிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: admin