ஆபத்தான மரங்களை அகற்றுமாறு அறிவுறுத்தல்

மத்திய மாகாணத்தில் உள்ள ஆபத்தான மரங்களை அகற்றுவதற்கு முன்னுரிமையளிக்குமாறு மாகாண ஆளுநர் லலித் யூ கமகே மாவட்ட செயலாளர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் பிரதானிகள் ஆகியோருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்து இரண்டு சிறுவர்கள் உயிரிழந்ததுடன், மேலும் சிலர் காயமடைந்தனர். இந்நிலையிலேயே மத்திய மாகாண ஆளுநர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

Recommended For You

About the Author: admin