விடுதலைப் புலிகள் காலத்து பாரிய எரிபொருள் தாங்கி ஒன்று மீட்பு!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் விடுதலைப் புலிகளால் நிலத்தில் புதைக்கப்பட்ட பாரிய எரிபொருள் தாங்கி ஒன்று நேற்று(31) மீட்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பில் உள்ள தனியார் காணி ஒன்றிலேய குறித்த எரிபொருள் தாங்கி நீதிமன்ற உத்தரவிற்கமைய மீட்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவு

இந்த அகழ்வுப் பணிகள் முல்லைத்தீவு நீதவான் ரி.சரவணராஜாவின் அனுமதியுடன் நேற்று(31) முன்னெடுக்கப்பட்டன.

16.3 அடி நீளமும் 7.9 அடி விட்டமும் கொண்ட வெறுமையான எரிபொருள் தாங்கியொன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமையவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மீட்கப்பட்ட எரிபொருள் தாங்கியை புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் கொண்டு சென்று பாதுகாக்குமாறும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் நீதிவான் பணித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor