பாவனைக்கு உதவாத 5,670 கிலோ மீன்கள் மீட்பு!

நீர்கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் மனித பாவனைக்கு உதவாத 5,670 கிலோ மீன்களை ஏற்றிச் சென்ற ஒருவர் லொறியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.​​

சிலாபத்தில் இருந்து நீர்கொழும்பு நோக்கி துர்நாற்றம் கொண்ட மீன்களை ஏற்றிச் சென்ற லொறி தோப்புவ பாலத்தில் வைத்து நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.

லொறியை பொலிஸார் சோதனையிட்ட போது 3.4 மில்லியனுக்கும் அதிகம் பெறுமதியான மீன்கள் மனித பாவனைக்கு தகுதியற்றதாக காணப்பட்டுள்ளது .

கைதான லொறியின் சாரதி நீர்கொழும்பு, பிடிபனை பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடையவராவர். கைதான சந்தேகநபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor