ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகியவர்களின் பதவி பறிப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் 13 பேரும் கட்சியில் வகித்த பதவிகளில் இருந்து நீக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

புதியவர்கள் நியமனம்

அத்துடன் கட்சி தாவியவர்களால் தவிசாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, டலஸ் ஆதரவு அணியினர் தொடர்பில் கட்சியின் நிறைவேற்றுக்குழு தீர்மானமொன்றை எடுக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்

Recommended For You

About the Author: webeditor