அறநெறி மாணவர்களுக்கு யோகாசன பயிற்சி வகுப்பு ஆரம்பம்

உலக சமாதான ஆலயம் யாழ்ப்பாணக் கிளையினால் (07/01/2024) ஞாயிற்றுக்கிழமை கீரிமலையிலுள்ள குழந்தைவேற் சுவாமிகள் சிவாலய மண்டபத்தில் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான யோகாசன பயிற்சி வகுப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வை சைவ மகா சபையின் பொதுச் செயலாளர்,தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பரா.நந்தகுமார் அவர்களும் யோகாசன போதனாசிரியர் ஸ்ரீ. நதிபரன் அவர்களும் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.

பிரதி ஞாயிறு தினங்களில் காலை-10.00 மணிமுதல் காலை-11.30 மணி வரை நடைபெறும் இவ் வகுப்புக்களில் ஆர்வமுள்ள ஆண்கள், பெண்கள் இருபாலாரும் கலந்து கொள்ள முடியும்.

Recommended For You

About the Author: S.R.KARAN