அவுஸ்திரேலியாவில் கத்திக்குத்து சம்பவம் சந்தேகநபர் கைது

அவுஸ்திரேலியா மெல்போர்ன் நகரில் இடம்பெற்ற தொடர் கத்திக்குத்து சம்வத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரை சுமார் மூன்று மணிநேரத்திற்குள் விக்டோரியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த தொடர் கத்திக்குத்து சம்பவங்கள் நேற்றைய தினம் இடம்பெற்றது.

இந்த சம்பவங்களில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவைரையில் எவருக்கும் உயிர் ஆபத்து இல்லை என வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.

இதுவொரு தனிப்பட்ட சம்பவம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதுடன், இது பயங்கரவாத செயற்பாடு அல்ல எனவும் விக்டோரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin