மீண்டும் அரசியலுக்கு வரும் முன்னாள் ஜனாதிபதி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கமைய, சந்திரிக்கா பண்டாரநாயக்க அடுத்த வாரம் அரசியல் நடவடிக்கைக்காக நாடு திரும்பலாம் எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

சுதந்திரக் கட்சியினால் நாளைய தினம் (08-01-2024) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மறைந்த பண்டாரநாயக்கவின் நினைவேந்தல் நிகழ்விலும் அவர் பங்கேற்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நினைவேந்தல் நிகழ்வின் பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுச் சபையும் கூடும் என்று அக்கட்சி மேலும் கூறியுள்ளது.

Recommended For You

About the Author: webeditor