பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு வந்த போதைப்பொருள்

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தின் ஊடாக பல்வேறு நபர்களால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட ஒரு தொகுதி போதைப்பொருள் சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் ஒரு கோடியே இருபத்தி எட்டு இலட்சம் ரூபா எனத் தெரியவந்துள்ளது.

ஐக்கிய இராச்சியம் மற்றும் ஜெர்மனியில் இருந்து இந்த நாட்டுக்கு அனுப்பப்பட்ட 11 பொதிகளில் இந்த போதைப்பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக குறித்த போதைப்பொருள் கையிருப்பு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin