மின்சார சபை ஊழியர்களின் பாரிய போராட்டம் கொழும்பில்

இலங்கை மின்சார சபையை தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் கொழும்பில் உள்ள மின்சார சபையின் பிரதான காரியாலயத்திற்கு முன்பாக இடம்பெறுகிறது.

தற்போதைய அரசாங்கம் இலங்கை மின்சார சபையை இந்தியாவின் அதானி குழுமத்திற்கு விற்பனை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதனையடுத்து இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள மின்சார சபை ஊழியர்கள் மற்றும் மின்சார சபையுடன் தொடர்புடைய ஆறு சங்கங்களின் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இதனைதொடர்ந்து பாதுகாப்பு கருதி குறித்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: admin