ஜனவரி 9ஆம் திகதி புத்தாண்டின் முதல் பாராளுமன்ற அமர்வு

2024 ஆம் ஆண்டுக்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 9ஆம் திகதி கூடவுள்ளதாக பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 12ஆம் திகதி இந்த அமர்வு நடைபெற உள்ளது.

கடந்த டிசெம்பர் மாதம் 12ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய பாராளுமன்ற விவகாரக் குழு இதனை தீர்மானித்திருந்தது.

அதன்படி, ஜனவரி 9, 2024 செவ்வாய் அன்று காலை 09.30 மணி முதல் 10.30 வரை வாய்வழி வினாவுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

காலை 10.30 மணி முதல் மாலை வரை. 5.00 வரை தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கச் சட்டமூலத்திற்கான அலுவலகம் ஸ்தாபிக்கும் திருத்தச்சட்டம் (இரண்டாம் வாசிப்பு), தேசிய நீரியல் திருத்தச்சட்டம்(இரண்டாம் வாசிப்பு), கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு திருத்தச்சட்டம் மற்றும் இலங்கை முதலீட்டுச் சபைச் சட்டத்தின் கீழ் வர்த்தமானி இலக்கம் 2355/30 இல் உள்ள உத்தரவுகள் மீதான விவாதம் இடம்பெறும்.

நல்லிணக்கச் சட்டமூலத்திற்கான அலுவலகத்தை ஸ்தாபிக்கும் திருத்தச்சட்டம் மற்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு திருத்தச்சட்டம் என்பன புத்தாண்டின் முதல் அமர்விலேயே விவாதிக்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த இரண்டு திருத்தச்சட்டங்கள் தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையில் பாராளுமன்றத்தில் சர்ச்சைகள் எழக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: admin