கொழும்பில் காணாமல் போன மகன் குறித்து தாயார் விடுத்துள்ள கோரிக்கை!

கொழும்பில் கடந்த இரண்டு மாதங்களாக காணாமல்போயுள்ள மாணவன் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடனடியாக தகவல் தருமாறு மாணவனின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு தனியார் கல்லூரியில் படித்து வரும் சம்சுதன் மன்னர் மன்னர் (ரஷீத்) எனும் மாணவன் கடந்த ஜூலை மாதம் 10 ஆம் திகதி முதல் காணாமல்போயுள்ளார்.

தாயார் விடுத்துள்ள அவசர வேண்டுகோள்
கடந்த இரண்டு மாதங்களாக இவர் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் கிடைக்கப்பெறாத நிலையில்,மாணவன் தொடர்பில் தகவல் தெரிந்தால் தாயாரின் தொலைப்பேசி இலக்கத்திற்கு 075-5100787 தொடர்புக்கொண்டு தகவல் தெரிவிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor