மேலும் ஒரு கைதி உயிரிழப்பு : பலர் தீவிர சிகிச்சை பிரிவில்

மாத்தறை சிறைச்சாலையில் மற்றொரு கைதியும் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

மாத்தறை சிறைச்சாலை கைதிகள் மத்தியில் பரவிய மர்ம நோயினால் பாதிக்கப்பட்ட பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

சிறைச்சாலை கைதிகள் மத்தியில் மூளை காய்ச்சல் பரவிவருவதாக சிறைச்சாலை தகவல்கள் அண்மையில் குறிப்பிட்டன.

இந்நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலர், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இவ்வாறு சிகிச்சை பெற்று வந்த 53 வயதான கைதி ஒருவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதேபோன்றும் அண்மையில் மற்றுமொரு கைதி ஒருவர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin