ஜனாதிபதிக்கு எதிராக வடக்கில் வலுக்கும் போராட்டம்

வடக்கிற்கான ஜனாதிபதியின் விஜயத்திற்கு எதிர்ப்பு வெளியிடுவதாக தெரிவித்து வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது கிளிநொச்சி அலுவலகத்தின் முன்பாக இன்று காலை 10.30 மணிக்கு இடம்பெற்றது.

“எமது உறவுகளுக்கான நீதி, காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கவனம் செலுத்தாத ஜனாதிபதி வடக்குக்கு விஜயம் மேற்கொள்வதற்கு தாம் எதிர்ப்பு வெளியிடுகிறோம்.

எமக்கு நீதி தராத தரப்புடன் நல்லிணக்க பேச்சு மேற்கொள்ள முடியாது.

அண்மையில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் சில நாட்களில் போராட்டத்தில் கலந்துகொண்ட தாய் ஒருவர் உயிரிழந்தார்.

அதேபோல் போராட்டத்தில் ஈடுப்பட்டுக்கொண்டிருக்கும் எம் ஒவ்வொருவரின் இறுதி மூச்சு வரையில் நீதிக்கான எமது போராட்டம் தொடரும்” என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்

Recommended For You

About the Author: admin