இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பொருட்கள் பறிமுதல்!

தமிழகத்தின் – ராமநாதபுரம் அருகே புதுமடம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தல் பொருட்களை கடத்த உள்ளதாக பொிசாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து மரைன் பொலிசார் புதுமடம் கடற்கரை பகுதிக்கு விரைந்து சென்று ரோந்து பணியில் ஈடுப்பட்ட போது சந்தேகத்திற்கு இடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாட்டா ஏசி வாகனத்தை சோதனையிட்டனர்.

இதன் போது அதில் சோப்பு, எண்ணெய், வாசனை தீரவியம் உள்ளிட்ட 16 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை கடல் வழியாக இலங்கைக்கு கடத்த வாகனத்தை நிறுத்தி வைக்கப்படுகிறது தெரியவந்தது.

இதையடுத்து பொருட்களை பொலிஸார் பறிமுதல் செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin