தென்னாப்பிரிக்காவிடம் இன்னிங்ஸ் மற்றும் 32 ஓட்டங்களால் இந்தியா படுதோல்வி

செஞ்சூரியனில் இடம்பெற்ற தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 32 ஓட்டங்களால் படுதோல்வியை சந்தித்துள்ளது.

163 ஓட்டங்கள் பின் தங்கியிருந்த நிலையில் தனது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 34.1 ஓவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.

இதன் மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்துள்ளதுடன், இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாப்பிரிக்கா 1 – 0 என முன்னிலைப் பெற்றுள்ளது.

இரண்டாம் இன்னிங்சில் இந்திய அணி சார்பில் விராட் கோலி மட்டும் 76 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். தென்னாப்பிரிக்காவின் நந்த்ரே பர்கர் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

Recommended For You

About the Author: admin