இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் கில்மிஷா

சென்னையில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமுக்கு பாடகி கில்மிசா சென்றுள்ளார்.

ஜீ தமிழில் சனி மற்றும் ஞாயிறு தினத்தில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி கில்மிஷா வெற்றி பெற்று டைட்டிலை வென்றார்.

தமிழ் நாட்டில் இருக்கும் கில்மிஷாவுக்கு பாடல் வாய்ப்புகள் குவிந்து வருவதால் நாடு திரும்ப முடியாமல் உள்ளார்.

எனினும், சென்னையில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமுக்கு சென்று அங்கிருக்கும் தொப்புள் கொடி சொந்தங்களை சந்தித்துள்ளார்.

அவர்களுடன் சில மணித்தியாளங்கள் இருந்து நலம் விசாரித்துள்ளார். இதன் போது எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

மிக விரைவில் அவர் நாடுத்திரும்புவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அவரை வரவேற்க இலங்கையர்கள் தயாராகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin