உள்ளூர் உற்பத்தியாளர்களின் கண்காட்சி யாழில் ஆரம்பம்

மார்கழி இசை விழாவுடன் இணைந்த வடமாகாணத்தைச் சேர்ந்த சிறிய நடுத்தர உற்பத்தியாளர்களது கண்காட்சியும் விற்பனையும் மற்றும் வெளிநாட்டிற்கான சந்தை வாய்ப்பும் யாழில் இன்று காலை ஆரம்பமானது.

மேற்படி இசை விழாவும் சிறிய நடுத்தர உற்பத்தியாளர்களது கண்காட்சியும் விற்பனையும் யாழ். இந்தியத் துணைத்தூதரகம், நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டுக் கலைக் கூடல் மற்றும் யாழ். வணிகர் கழகம் இணைந்து யாழ்ப்பாண மத்திய கலாசார மண்டபத்தில் 27,28,29 ஆகிய தினங்களில் நடத்துகின்றன.

மாலை 4.45 முதல் இரவு 9.15 வரை மார்கழி இசைவிழா நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: S.R.KARAN