இந்தோனேஷிய வெடிவிபத்தில்12 பேர் உயிரிழப்பு

இந்தோனேஷியாவின் கிழக்கு பகுதியில் உள்ள நிக்கல் பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சுமார் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இந்த விபத்தில் மேலும் 39 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Sulawesi தீவில் உள்ள குறித்த தொழிற்சாலையில் இன்று அதிகாலை 5.30 அளவில் இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் 7 பேர் இந்தோனேஷியர்கள் எனவும் ஐந்து வெளிநாட்டு தொழிலாளர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகளின் போதே இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin