ஓடும் ரயிலுக்கு அடியில் மாட்டி அதிஷ்டவசமாக உயிர்த் தப்பிய தாயும், பிள்ளைகளும்

பீகாரின் பார்ஹ் ரயில் நிலையத்தில் சனிக்கிழமையன்று பெண் ஒருவர் மற்றும் அவரின் இரண்டு குழந்தைகள் வேகமாக பயணித்த ரயிலுக்கு அடியில் மாட்டிக்கொண்ட போதிலும் அதிசயமாக உயிர் தப்பினர்.

இது காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அந்தப் பெண் தனது இரண்டு குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக்கொண்டு ரயிலுக்கு அடியில் படுத்திருப்பதை காணொளி காட்டுகின்றது.

அந்தப் பெண்ணும் அவரது குழந்தைகளும் பெகுசராய்யிலிருந்து வந்து, பாகல்பூரில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படும் விக்ரம்ஷிலா எக்ஸ்பிரஸில் குடும்பத்துடன் டெல்லிக்கு சென்று கொண்டிருந்தனர்.

சனிக்கிழமை பர்ஹில் ரயிலில் ஏறும் போது, நடைமேடையில் பெரும் கூட்டம் இருந்ததால், அந்தப் பெண் தனது குழந்தைகளுடன் தண்டவாளத்தில் விழுந்தார்.

மக்கள் அவர்ளை காப்பாற்றுவதற்குள், ரயில் நிலையத்தை விட்டு வெளியேறத் தொடங்கியது, அதைத் தொடர்ந்து அந்த பெண் ரயிலுக்கு அடியில் படுத்துப்கொண்டு பிள்ளைகளையும் காப்பாறியுள்ளார்.

ரயில் புறப்பட்ட பிறகு, அந்த பெண்ணையும் அவரது குழந்தைகளையும் மீட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

Recommended For You

About the Author: admin