நாட்டிலிருந்து வேலை வாய்ப்பிற்காக வெளிநாடு செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

சுற்றுலா விசாவில் மலேசியா சென்று, சுற்றுலா அனுமதிப்பத்திரத்தை வேலை விசாவாக மாற்றி, அந்நாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு வந்த கடத்தல் கும்பலை கைது செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அவ்வாறான முறைமை எதுவும் இல்லை எனவும், இவ்வாறான மோசடியாளர்களிடம் சிக்கவேண்டாம் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வெளிநாடு செல்வதற்கு முன்னர் தமது வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் நம்பகத்தன்மையை சரிபார்க்குமாறும் பொலிஸார் பொதுமக்களை மேலும் கேட்டுக்கொள்கின்றனர். இது தொடர்பான விழிப்புணர்வுக்காக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor