மதுபானசாலைகள் பூட்டு: சுற்றுலா ஹோட்டல்களுக்கு அனுமதி

எதிர்வரும் 25, 26 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள மதுபான சாலைகள் மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு இவ்வாறு மதுபான சாலைகள் மூடப்படுவதாக கலால் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியுள்ளது.

எவ்வாறாயினும், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் அங்கீகரிக்கப்பட்ட நட்சத்திர வகைப் பிரிவின் கீழான ஹோட்டல்களில் விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

25ஆம் திகதி இவ்வாறு நட்சத்திர வகையிலான ஹோட்டல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் 26ஆம் திகதி அனைத்து மது விற்பனை நிலையங்களும் மூடப்படும் எனவும் கலால் திணைக்களம் கூறியுள்ளது.

Recommended For You

About the Author: admin