மியான்மர் சிறையில் இலங்கை மீனவர்கள்

மியான்மரின் சிறையில் உள்ள இலங்கை மீனவர்களை வழக்கு எதுவும் இன்றி விரைவாக விடுவிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மியான்மருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.

அதற்காக மியான்மர் உள்துறை அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தூதுவர் ஜனக பண்டார கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட மீனவர்களில் நால்வர் நோய்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை மீனவர்கள் மியான்மர் அரசால் கைது செய்யப்பட்டுகின்றனர்.

மியன்மாரின் கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 15 இலங்கை மீனவர்கள் இரண்டு மீன்பிடி படகுகளுடன் கடந்த மாதம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கல்பிட்டி மற்றும் நீர்கொழும்பில் இருந்து மீன்பிடி நடவடிக்கைக்காக சென்றவர்களாகும்.

குறித்த மீனவர்கள் கடந்த 2ஆம் திகதி மியன்மார் அரசால் கைது செய்யப்பட்டதாகவும் தூதுவர் ஜனக பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.

Recommended For You

About the Author: admin