காலாவதியான அழகுசாதன பொருட்கள் விற்பனை

புறக்கோட்டையில் காலாவதியான கிரீம் மற்றும் வாசனை திரவியங்களை தலா 100 ரூபாவிற்கு விற்பனை செய்து மோசடியில் ஈடுபடுவதனை தடுக்கும் நடவடிக்கையில் நுகர்வோர் அதிகார சபையின் கொழும்பு சோதனை பிரிவு ஈடுபட்டுள்ளது.

நுகர்வோர் அதிகார சபையின் கொழும்பு சோதனை பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, புறக்கோட்டையின் முதலாம் மற்றும் இரண்டாம் குறுக்கு வீதியின் நடைபாதையில் காலவாதியான வாசனை திரவியங்கள் மற்றும் அழகுசாதன பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காலாவதியான காரணத்தால் அளிக்கப்பட வேண்டிய குறித்த பொருட்கள் வெல்லம்பிட்டி பிரதேசத்தில் உள்ள ஒருவரால் பெறப்பட்டு விற்பனைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இதன்படி, குறித்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin