கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேற்றில் வரலாற்றுச் சாதனை படைத்த கிளிநொச்சி முழங்காவில் மகாவித்தியாலயம்!

2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேற்றில் கிளிநொச்சி முழங்காவில் மகாவித்தியாலயம் பொறியியல் தொழினுட்பப் பிரிவில் மாவட்டத்தில் 1ம் மற்றும் 2ம் நிலையையும் , கலைப்பிரிவில் 3ம் மற்றும் 7ம் நிலைகளையும் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

அதன்படி முதல் நிலையினை மாணவன் இராஜசேகர் விதுசன் பெற்றுக்கொண்டார். இரண்டாம் நிலையினை மாணவர் செல்வன் G.சனோஜன் பெற்றுக்கொண்டார்.

மேலும் கலைப்பிரிவில் 3ம் நிலையினை மாணவி ஜென்சிகா சிவகுமார் பெற்றுள்ளதுடன் 7ம் நிலையை மாணவி பிறேம்குமார் கயூரி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor