ப்ராக் பல்கலைக்கழக துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்

ப்ராக் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கை உடனடியாகத் தெரியவில்லை, ஆனால் படுகொலைக்குப் பிறகு துப்பாக்கிச் சூடு நடத்தியவர் “கொல்லப்பட்டுள்ளார்” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும், பல்கலைக்கழக வளாகம் முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், சம்பவ இடத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் இருப்பதை உறுதிப்படுத்த முடியும்,” என்று X தளத்தில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொது மக்கள் வெளியில் வரவேண்டாம் என்றும் வீட்டினுள் இருக்குமாறும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

சம்பவ இடத்தில் இருந்து மாணவர்கள் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: admin